Saturday, April 30, 2011

மின்மினி தேவதை


நிலவின் முழு ஒளி என் இரவை விழுங்க
என் நிழல் காட்டி இருள் வளர்த்தேன்...
எனக்குள் கரைந்து போன
மின்மினியின் வரவை எண்ணி!


--------------------------------


நீ உறங்கும் வேளையில்

காற்றுக்கு ஓய்வு இல்லை
காலம் நகர்வதில்லை

பூக்கள் மலர்வதில்லை
வண்டுகள் பறப்பதே இல்லை

அலாரம் அடிப்பதில்லை
கொசுக்கடி அறவே இல்லை

செல்போன் சிணுங்கல் இல்லை
செல்லமாய் உன்னை கொஞ்சுவது கூட இல்லை.....
ஏனடி இவ்வளவும்?!

தேவதையின் கனவை கலைக்க
யாருக்கு தான் மனசு வரும்!

மொக்கை கவிதை

உருகி உருகி காதலித்த போது கூட
ஒரு உணர்வும் இருந்ததில்லை
இந்த மரக்கட்டை உடம்பில்!
ஆனால் இன்று
அட்டு பிகரின் மொக்கை பார்வையில்
அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கிறதே...

ஒரு வேளை அல்சராக இருக்குமோ?