Saturday, July 16, 2011

காத்திருக்கிறேன்



காத்திருத்தல் பெருவலி
காதலில் அது முடிவிலி..!
கருவறைக் குழந்தயாய்
சுருண்டு கிடக்கிறேன்
உன் இதழசைவில்
நம் காதலை பிரசவிக்க...

எப்போது வருவாய்?
காத்திருக்கிறேன்!

-------------------

காதலித்தலை விட
காதலிக்கப்படுதல் சுகம்
என்று அறிந்த
சுயனலவாதி அவள்!
அள்ளித் தெளித்த காதலில்
அரை சதமாவது திருப்பித் தருவாள்
என்ற நம்பிக்கையில்
அமாவாசையின்
அடி இரவில்
அமர்ந்து பவுர்ணமிக்காக
காத்திருக்கிறேன் நான்!

2 comments:

vidivelli said...

காத்திருத்தல் பெருவலி
காதலில் அது முடிவிலி..!

wonderful"
supper poem
congratulation"

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in