Friday, August 12, 2011
காதல் தவிர வேறென்ன?!
அழுது புலம்பி அரற்றி என்ன பயன்?..
அதற்கு பதிலாய்
கடைசியாக ஒரு முறை
உன் நேசத்தை சொல்லி விட்டு போ..
நீ இல்லாத இடத்தில்
உன் நினைவுகளாவது நெஞ்சோடு
நிறைந்திருக்கட்டும்!
--------------------
நம் காதலின் கடைசி புள்ளியாய்
நீ விட்டு சென்ற
கண்ணீர் துளியெல்லாம்
வெள்ளமாய் மாறி
மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன்
காதல் கடலில்!
--------------------
விழுவது தவறல்ல
விழுந்த பின்
எழ நினைப்பது தான் தவறு...
காதலில்!
---------------------
நீ விலகி சென்றாலும்
என்னை விலக்கிச் சென்றாலும்
நீ விட்டுச் சென்ற
என் உயிர் மொத்தமும்
எடை கூட்டி செல்லும்
என் இறுதி ஊர்வலத்திலும்
உன் காதலோடு!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment