Friday, August 12, 2011

காதல் தவிர வேறென்ன?!


அழுது புலம்பி அரற்றி என்ன பயன்?..

அதற்கு பதிலாய்

கடைசியாக ஒரு முறை

உன் நேசத்தை சொல்லி விட்டு போ..

நீ இல்லாத இடத்தில்

உன் நினைவுகளாவது நெஞ்சோடு

நிறைந்திருக்கட்டும்!

--------------------
நம் காதலின் கடைசி புள்ளியாய்

நீ விட்டு சென்ற

கண்ணீர் துளியெல்லாம்

வெள்ளமாய் மாறி

மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன்

காதல் கடலில்!
--------------------

விழுவது தவறல்ல

விழுந்த பின்

எழ நினைப்பது தான் தவறு...

காதலில்!
---------------------
நீ விலகி சென்றாலும்

என்னை விலக்கிச் சென்றாலும்

நீ விட்டுச் சென்ற

என் உயிர் மொத்தமும்

எடை கூட்டி செல்லும்

என் இறுதி ஊர்வலத்திலும்

உன் காதலோடு!

1 comment:

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in