Tuesday, May 24, 2011

உன் ஒற்றை முத்தம்





என் அறை முழுதும்
இறைந்து கிடக்கும் உன் முத்தங்களை
அடுக்கி வைக்க இடமில்லை
என் இதய வங்கியில்...
அவசர பரிமாற்றம்
ஒரு ஆயிரம் முத்தங்களையாவது
திரும்ப பெற்று கொள்ளேன்!

இறகு வழி நுழையும் காற்றுக்கு கூட
இடம் தராமல் -நீ
இறுக்கி அணைத்து
இட்ட முத்தத்தின் ஈரம்
ஆவியாகி போனது
என்னுடல் அக்கினி சூட்டால்...

மண்ணுக்கு மழை தருவோம்...
இடைவிடாமல்
ஈரமாக்கு நீ
ஆவியாக்குகிறேன் நான்!

செத்து பிழைக்க
வித்தை தேவையில்லை
உன் ஒற்றை முத்தம் போதும்!

அவசரம் வேண்டாம்
அரை நொடி கழித்தே கொடு....!

No comments: