அந்தி மாலை
சாரல் மழை
தூரத்து வான்மேகம்
வான்சிந்தும் வானவில்
சிலிர்த்து நிற்கும் பறவைகள்
இடம் கொடுக்கும் குடை மரம்
ஜன்னல் ஓரம்
ஒற்றை நாற்காலி
அதில் நான்
மனதெங்கும் என்னவள்
சிந்தி சிரிக்கும் காதல்
பொங்கி வழியும் கவிதை
ஆனால் பேனா????
தேவையில்லை
சிரிக்கின்ற-அவள்
இதழ் மை எடுத்து
எழுதும் முன்
எகத்தாளமாய் சிரிக்கிறது
என் காதல்...
இரு வரி கவிதையாம்
அவள் இதழிடம் கடன் வாங்கி
எழுதி முடித்து
என்னத்தை கிளிக்க போகிறாய்?!
இரு வரியை நான்காக்கு
அவள் முகவரியை முழுதாக்கு
கற்றுக் கொடுத்தது காதல்...
கடல் தாண்ட புறப்பட்டு விட்டேன்
நான்...!!!!!!
No comments:
Post a Comment